வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
அருஞ்சொற்பொருள்:
வாக்கு உண்டாம் = திருந்திய சொல்வளம் உண்டாகும்;
பாடல் விளக்கம்:
வலிமை நிறைந்த திருமேனியையும், துதிக்கையையும்
உடைய விநாயகக் (அருகக்) கடவுளின்
திருவடிகளை முறையாக மலரிட்டு வணங்குவோருக்கு திருந்திய சொல்வளமும், தெளிந்த
நல்லெண்ணமும், செந்தாமரைப்
பூவினில் வீற்றிருக்கும் (இலக்குமி) தேவியின் அருட்பார்வையும் உண்டாகும்; அவர்தம்
உடலை பிணியும் மூப்பும் அணுகாது.